சங்கு ஊதுவது அபசகுணமாக தற்பொழுது சிலரால் கருதப்படுகிறது. ஆனால், சங்கு ஊதுவதுதான் காலங்காலமாக இந்துக்களின் வழக்கமாக உள்ளது.

பண்டைய காலங்களில் போர் துவங்கும் போதும் முடியும் போதும் சங்கு ஊதுவார்கள். சங்கு அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் ஒலிப்பதாக சொல்வர்.

சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார செயலாக்கம் நன்றாக செயல்படுவதாக சொல்வர்.

சங்கு ஊதுவது நம் மூச்சை சீராக்குவதோடு நம் நுரையீரலின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.

மேலும் சங்கு கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. சங்கினுள் சென்று வெளியாகும் காற்று கிருமிகளை அழிக்கின்றது. இதனால்தான் சில வீடுகளில் சங்கை வாசலில் மாட்டி வைப்பர். மேலும் கோயில்களில் தீர்த்தத்தில் சங்கை போட்டு வைப்பர். இது நீரில் இருக்கும் கிருமிகளையும் அழித்து விடும்.

சங்கை ஊதுவதினால் உடலில் இருக்கும் கிருமிகளும் அழிகின்றன.

புகைப்பட மூலம்: aetherforce.com